பார்வையற்றோருக்கு கிடைத்திருக்கும் தெய்வீக சக்தி. ஜாதகமே இல்லாமல், நம் எதிர்கால வாழ்க்கையை மிகவும் சரியாக சொல்கிறார்.

முப்பது வயது ஆன ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. எந்த பெண் பார்த்தாலும் ஜாதகம் பொருத்தமில்லை. திடீரென்று, அவரது நண்பர் பார்வையற்ற ஒருவரைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவரிடம் போய், உன் தலையையும், கையையும் கொடுத்தால், எதிர்கால வாழ்க்கையை சரியாக சொல்லுவார் என்றிருக்கிறார். நண்பர் சொன்னா சரியாக இருக்கும் என்று பார்வையற்றவரை சந்தித்துள்ளார். பார்வையுள்ளவர்கள் சொன்னதே நடக்காமல் இருக்கும்போது, இவர் என்ன சொல்லப்போகிறார் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி. தலையில் எழுமிச்சையை வைத்த அந்த பார்வையற்றவர். தம்பி உனக்கு கல்யாணம் ஆகளைனு கவலையா இருக்கிறயா?. நான் சொல்லுகிற கோவிலுக்கு சென்றுவா, உடனே கல்யாணம் நடக்கும் என்றிருக்கிறார். கோவிலுக்கு சென்ற இரண்டு வாரங்களில், ஜாதகப் பொருத்தம் கிடைத்தது. திருமணமும் ஆனது. இந்த நண்பரைப் போன்று நிறைய பேர் அவரிடம் சென்று தெய்வ வாக்குகளை கேட்கின்றனர். சொன்னது நடக்கிறது. நாங்களும், சென்று பார்த்தோம். ஜாதகத்தைப் பார்த்து, தவறாக சொல்லும் ஆசாமிகள் இருக்கும் போது. இவர், வெறும் கை ரேகையும், எழுமிச்சை பழத்தையும் வைத்து தெளிவாக சொல்வது மிகப்பெரிய ஆச்சரியம்.

www.kongumalar.com


எங்கு இருக்கிறார்?.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது வெள்ளகோயில் பேருந்து நிலையம். பேருந்து நிலையத்தில் இருந்து டெலிபோன் எக்ஸ்ஜேஞ்ச் சாலையில் மூன்றாவது Left  ரோடில் செல்ல வேண்டும். உடனே Right சைடில் டர்னிங் வரும். அங்கு ஒரு பெரிய வேப்பமரம் இருக்கும். வேப்பமரத்தில் இருந்து நான்காவது வீட்டில் பார்வையற்றவர் இருக்கிறார். 62 வயதான இவருக்கு, திருமணம் ஆகவில்லை. தன்னுடைய அண்ணன் மகள் வீட்டில் தங்கி வருகிறார். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், அவர் அதிக பணம் கேட்பதில்லை. பூஜைக்கு வெறும் இருபது ரூபாய் போதும் என்று வாங்கிக்கொள்கிறார். வசதியுள்ளவர்கள், அவர் கேட்காமலே 500 ரூபாய் வரை கொடுக்கிறார்கள். வித்தியாசமான ஒருவர் என்றுதான் சொல்ல வேண்டும்.


No comments:

Post a Comment