சிவகங்கை மாவட்டத்தில் 189 சத்துணவு உதவியாளர் வேலை


சிவகங்கை மாவட்டத்தில் காலியாக இருக்கும் 189 சத்துணவு உதவியாளர் பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பெண்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எழுத படிக்க தெரிந்தால் போதும். இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் வயது வரம்பு 21 லிருந்து 40க்குள்ளும், பழங்குடியினர் வயது வரம்பு 18 லிருந்து 40க்குள்ளும், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் 20 லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி நியமிக்கும் இடத்திற்கும் வீட்டிற்கும் 3 கி.மீ சுற்றளவிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகங்களில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வி, வயது, ஜாதி, இருப்பிடம், வருவாய், முன்னாள் படைவீர்ர் சான்று, கலப்பு திருமண சான்று, ஆதார் அட்டை போன்றவற்றுடன்  விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 25 ஆம் தேதிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ, நகராட்சி கமிஷனரிடம் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment