சென்னை அமைந்தகரை பகுதியிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் புரட்சிகர மாணவர் அமைப்பினர் இணைந்து சூறையாடினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதை கண்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் எதிரே வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே, நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்களும் சாலை மறியலில் குதித்துள்ளனர். பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலால் பல்வேறு கல்லூரிகளிலும் மாணவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment