ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்....

NEWS UPDATE BY www.kongumalar.com

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பூந்துறை செல்லும் வழியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பணி செய்து வருகிறார்கள். நெடுஞ்சாலை தற்போது குறுகியசாலையாக இருக்கிறது. ஜனவரி 5 முதல் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவிற்காக சேலம், நாமக்கல், சென்னை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த வழியாகத் தான் செல்வார்கள். இந்த வழியாக பக்தர்கள் செல்ல வேண்டும் என்றால் உடனடியாக பாதாள சாக்கடை பணியை முடித்து சாலையை சீரமைக்க வேண்டும். சாலை விபத்துக்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்தால் ஈரோடு மற்றும் வெளிமாவட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதிகாரிகள் நினைத்தால் மலையையும் நகர்த்தமுடியும்...