எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பிரச்சனைகளில் இருந்து, உங்கள் வாரிசுகளை காப்பாற்ற வேண்டாமா?. நீங்கள் நினைத்தால் முடியும். 


ம் அன்றாட வாழ்க்கையில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் அதிகமாகவே இருந்து வருகிறது. சில வருடத்திற்கு முன்பு, பால் வாங்க வேண்டும் என்றால் Society க்கு பாத்திரம் எடுத்துச் செல்வோம். தற்போதுஎங்கு பார்த்தாலும் சூப்பர் மார்க்கெட்,மளிகைக் கடை, பாஸ்ட்புட் உணவகம் என வளர்ச்சி அடைந்துவிட்டது. வளர்ச்சி நமக்கு தெரியாமல், ஆபத்தையும் கொடுத்து வருகிறது.

பயன்படுத்தும் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் என்ன?.

1. பால் பாக்கெட், காய்கறிகள் வாங்கும் பாலீத்தின் கவர் மற்றும் மளிகை கடைகளில் வாங்கும் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்யப்பட்டிருக்கும் (இதில் வரும் பிளாஸ்டிக் கவர்களை குப்பையில் கொட்டுகிறோம்)
குப்பைக்குச் செல்லும், அந்த பிளாஸ்டிக் கவர்களினால் டெங்கு, மலேரியா,டைபாய்டு, கேன்சர் போன்ற நோய்கள் நம்மை தாக்கும். எப்படி என்று நினைக்கிறீர்களா?. மழை காலங்களில் குப்பையில் இருக்கும் பிளாஸ்டிக் கவரில் தண்ணீர் தேங்கி நின்று கொசுக்களை உருவாக்கும். கொசு மூலம் டெங்கு, மலேரியா, டைபாய்டு நோய் பரவும். பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால், புகை பரவும். அந்த புகை மூலம் கேன்சர் நோய் பரவும். பிளாஸ்டிக் புகை மூலம் கேன்சர் பரவும் என்று விங்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது

2. கடைகளில் வாங்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில்களை எரிக்கும் போது கேன்சர் பரவும். அதுமட்டுமில்லாமல், பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் கலந்தால் நிலத்தடி நீர் சேமிப்பும் பாதிக்கப்படுகிறது. ஆம், மழை காலங்களில் தண்ணீர் நிலத்திற்கு செல்லாமல், பிளாஸ்டிக் பொருட்கள் தடுத்துவிடும். பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் கலந்தால் மக்குவதற்கு 100லிருந்து 1000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிடும். அதனால், எதிர்காலத்தில் உங்கள் வாரிசுகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காது. வாரிசுகளை காப்பாற்ற நினைப்பவர்கள் தயவு செய்து பிளாஸ்டிக் பொருட்களை குப்பை தொட்டியிலோ,மண்ணிலோ போட வேண்டாம். 

தேவையில்லா பிளாஸ்டிக் பொருட்களை,கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிடலாம். 
உங்கள் வீட்டில் இருக்கும் தேவையில்லா பிளாஸ்டிக் பொருட்களை குறைந்தபட்சம் 5 கிலோவாக சேர்த்து வைத்து, 73730-95959 (ஈரோடு மாவட்டத்திற்கு மட்டுமே இந்த சேவை) மிஸ்கால் கொடுங்கள். உங்களுக்கு போன் செய்து, நேரடியாக வந்து கிலோ 10 ரூபாய்க்கு வாங்கிச் செல்வார்கள். 

இந்த சேவை பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் அபாயங்களில் இருந்து தடுப்பதற்காக மட்டுமே. தொழில் செய்வதற்காக இல்லை. படித்தவர்கள், தயவு செய்து இந்த சேவையைப் பற்றிங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் ஏற்படும் ஆபத்தில் இருந்து ங்களது எதிர்கால வாரிசுகளை காத்திட விரும்புபவர்கள், எங்களிடம் சேர்ந்து இந்த சேவையை செய்யலாம். சேவையில் ஆர்வமுள்ளவர்கள் 73730-95959 என்கிற மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொள்ளலாம். 
டி.வி, ரேடியோனு விளம்பரம் செய்யும் பணத்திற்கு சேவைகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். நல்ல சேவைக்கு தானாகவே மக்கள் விளம்பரம் செய்வார்கள் என்று நம்புகிறோம்.
எதிர்கால நலன் கருதி வெளியிடுவோர் www.kongumalar.com

No comments:

Post a Comment