தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலைகளில் சூப்பர்வைசர் வேலை

தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழ் செயல்படும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளான அண்ணா கூட்டுறவு நூற்பாலை (தேனி மாவட்டம்), பாரதி கூட்டுறவு நூற்பாலை (எட்டயபுரம்), கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை (ஆரல்வாய்மொழி), புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை (அறந்தாங்கி), கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை (ஊத்தங்கரை), இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு (அச்சங்குளம் கிராமம்) நூற்பாலைகளில் ஷிப்ட் சூப்பர்வைசர் பணியில் சேர விரும்புவோர் டெக்ஸ்டைல்ஸ் துறையில் பி.எஸ்.சி அல்லது டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறையில் பி.டெக் படித்திருக்க வேண்டும். நூற்பாலைகளில் இரண்டு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2 ஆண்டுகளும், ஆதிதிராவிடருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கபடும்.
காலியிடங்கள்: 16.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை "இணை இயக்குநர் (துணிநூல்), கைத்தறி மற்றும் துணுநூல் இயக்குநர் அலுவலகம், குறளகம் 2 வது தளம், சென்னை-108" என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் 13.03.2015-ம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்னர் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய: bit.ly/ptkalvi

No comments:

Post a Comment