நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன், செல்வா. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும்
ஒரு அரசுப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து, 95 சதவித மதிப்பெண் பெற்றான்.
சென்னையில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில், கவுன்சிலிங் மூலம்
என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தான். நான்கு வருடம் முடிந்தது. ஆனால், செல்வாவிற்கு
ஆங்கிலத்தில் பேசத் தெரியாது. காரணம், நம்ம நாட்டில் எங்க பார்த்தாலும் தமிழ்.
இன்றும், பல கல்லூரிகளில் பாடங்களை தமிழ் மொழியில் தான் நடத்துகிறார்கள். என்ன
செய்வது, ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் வராதே?.. செல்வா, கல்லூரியில் படிப்பை
முடித்து இரண்டு வருடம் ஆனது, இதுவரை வேலை கிடைக்கவில்லை. என்ன காரணம் என்று
உங்களுக்கு புரிகிறதா?.
இப்படி தமிழ் தமிழ்னு சொல்லி, எங்களை ஆங்கில மொழியில் தைரியமாக பேச
முடியாமல் செய்துவிட்டீர்களே?.. தமிழ் மொழியை தவறாக சொல்லவில்லை. ஆனால், தமிழ்
மொழியை தெரியாதவர்களுக்கு ஆங்கிலத்தில் தானே பேசியாக வேண்டும். மிகவும் பிரபலமான
ஒரு பிஸ்கட் நிறுவனம், பெருந்துறை சிப்காட்டில் வர இருக்கிறது. இதற்காக, ஆட்கள்
தேர்வு செய்து வருகிறார்கள். ஆங்கிலத்தில் நன்றாக பேசுபவர்கள் மட்டுமே,
இன்டர்வியூவுக்கு வரவேண்டும் என்று விளம்பரம் வந்திருந்தது. எதற்காக, ஆங்கில மொழி
அவசியம் என்று கேட்கிறார்கள் என்று புரிகிறதா?. அந்த நிறுவனம், இந்தியாவின் பல
இடங்களில் இயங்கி வருகிறது. பிற மாநிலங்களில் இயங்கி வரும் அந்த நிறுவனத்திற்கு
வேலைக்காக அனுப்பிவைத்தால், அந்த மாநில மொழிகள் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில்,
அப்போது ஆங்கில மொழி உதவியாக இருக்கும். இதுபோல, நம் தமிழ்நாட்டில் இருக்கும் பல
ஐ.டி கம்பெனிகள், தொழிற்சாலைகள் என எங்கு பார்த்தாலும் ஆங்கில மொழி அவசியம்
ஆகிவிட்டது. அப்படி இருக்கும் போது, இன்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு தமிழை
கட்டாயமாக்கி வருகிறார்கள். தமிழை யாரும் மறக்க முடியாது. ஏனெனில் தமிழ் நம்முடைய
தாய்மொழி. ஆங்கிலத்தில் எப்படி பேசுவது என்று குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால்
போதும். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கல்லூரியில் படித்து என்ன பலன். ஆங்கிலம்
பேசத் தெரியவில்லையே?. சம்பாதிக்கும் நோக்கத்துடன், கல்லூரியை ஆரம்பித்தவர்கள்
யாரும் மாணவர்களின் திறமையை வளர்த்த நினைப்பதில்லை என்பதே வேலையில்லா சூழ்நிலைக்கு
ஒரு முக்கிய காரணம். டிகிரி சான்றிதழிற்காக மட்டுமே, மாணவர்கள் கல்லூரியில்
படிக்கிறார்கள். கல்லூரியில் படித்து என்ன பலன். லட்சக்கணக்கில் செலவு செய்த
பணத்தை, வங்கிக் கணக்கில் போட்டிருந்தால் வட்டியாவது வந்திருக்கும். எதிர்கால
நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com
இப்படிக்கு வேலையில்லா பட்டதாரியின் குமுறல்...
No comments:
Post a Comment