+2 படித்தவர்களுக்கு Data Entry Operator வேலை

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் விருதுநகரில் இயங்கி வரும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் (Sarva Shiksha Abiyan) தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் 10 Data Entry Operator பணியிடங்கள் நிரப்பட உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஜூனியர் கிரேடு சான்றிதல் மற்றும் எம்.எஸ்.ஆபீசில் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.chiefeducationalofficer.in என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு எப்படி நடைபெறும்?.
எழுத்துத் தேர்வு ஜூன் 13ல் விருதுநகர், ஸ்ரீ வித்யா இன்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறுகிறது. தமிழ் தட்டச்சில் ஒரு நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அளவில் பத்து நிமிடங்களுக்கு உரைவடிவில் தட்டச்சு செய்ய வேண்டும். ஆங்கில தட்டச்சில் ஒரு நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அளவில் 10 நிமிடங்களுக்கு உரை வடிவில் தட்டச்சு செய்ய வேண்டும். அதேபோன்று, எம்.எஸ் ஆபீசிலும் பத்து நிமிடங்கள் தேர்வு இருக்கும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்க கடைசி தேதி: 05.06.2015 (மாலை 05.30 மணி வரை)
ஏதேனும் உதவிகளுக்கு: 04562-252702

No comments:

Post a Comment